TBRGETA திருவல்லிக்கேணி வட்டக் கிளையின் ஐம்பெரும் விழா.#தமிழ்நாடு_ஓய்வுபெற்ற_அனைத்து_அரசுஊழியர்_ஆசிசிரியர்_சங்கம்_திருவல்லிக்கேணி_கிளை. #ஐம்பெரும்_விழா. சென்னை (தெற்கு) மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டக்கிளையின் சார்பில் சங்கத்தின் அமைப்பு தின விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா 11.7.25 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு திருவல்லிக்கேணி கிளைத் தலைவர் தோழர் ஆசான் இராம.மோகன்தாஸ் தலைமை வகித்தார்.செயலாளர் தோழர் வீ.முத்துலிங்கம் செயலாளர் செயலர் அறிக்கையினையும் தோழர் ம.சு.சுந்தரமூர்த்தி பொருளாளர் நிதி நிலை அறிக்கையினையும் சமர்ப்பித்தனர். மேதகு நீதியரசர் திரு.E. கிருஷ்ணன் அவர்கள், மேனாள் மாநில துணைத் தலைவர் தோழர் ஆ.ந.ஸ்ரீநாத் அவர்கள், மாவட்ட தலைவர் தோழர் பா.சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தோழர் லோ‌.இரா.இராசேந்திரன் மாவட்ட செயலாளர் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர்.இராம.மோகன்தாஸ் அவர்கள் நிறைவுரையாற்றினார். புலவர் இராசகோபாலன் அவர்கள் நன்றியுரை கூறினார்.விழாவில் பெருமளவில் பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில் சிறப்பான அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி யின் நாவல்'நள்ளிரவின் குழந்தைகள் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

LFAD Retired officials Reunion 2025 Annual get_tohether

தோழர் பி.ஆர்.சி அவர்களுக்கு நினைவஞ்சலி