Posts

Showing posts from January, 2025

இன்றைய குறள்

Image
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்  இந்திரனே சாலுங் கரி. மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.. கருணாநிதி  உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான். சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான். Translation: Indra, the king of the inhabitan...

இன்றைய குறள்

Image
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்   உறைநிலத்தோ டொட்ட லரிது. மு.வ உரை: அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது. பரிமேலழகர் உரை: சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது. நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம். கருணாநிதி  உரை: பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல. சாலமன் பாப்பையா உரை: மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம். Translation: It is a hazardous thing to attack men...

இன்றைய குறள்

Image
அறத்துப்பால், தீவினையச்சம், குறள் 204, மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. ​ பரிமேலழகர் உரை (இதன்பொருள்) பிறன் கேடு மறந்தும் சூழற்க= ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாது ஒழிக;சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்= எண்ணுவனாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். பரிமேலழகர் உரைவிளக்கம்' கேடு' என்பது ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான்நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம். மு.வ  :  பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும். சாலமன் பாப்பையா :  மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

ஆன்லைன் பணமோசடிகள் அதிகரிப்பு.எச்சரிக்கை தேவை

Image
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருவது கவலை தரக்கூடிய விடயமாக  மாறிவிட்டது.ஒரு பக்கம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பணியிலுள்ள இளைஞர்களும் பெருமளவில் பணத்தை இழந்து வருகின்றனர்.இதற்கிடையில் ஆன்லைன் கைது போன்ற  வீடியோ அழைப்பு மூலம் பல அப்பாவி மக்கள் பெருந்தொகையினை இழந்து வருகின்றனர்.அதிலும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வருவோர் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களைக் குறிவைத்து பணம் பறிக்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று  வெளியான மாலை முரசு இதழில் மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் ₹5.50கோடியை இத்தகைய மோசடியில் இழந்துள்ளார் என்று செய்தி வந்துள்ளது.காவல்துறையோ அல்லது சிபிஐயோ டிஜிட்டல் முறையில் நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள் என்று பொதுமக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு டிஜிட்டல் மோசடியில் பணம் இழந்த பொதுமக்கள் உடனடியாக 1930  என்ற எண் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.மேலும் இந்த புகாரை டிஜிட்டல் மூலம் பதிவு செய்யவும் வேண்டும்.இது தொடர்பாக இணைய தளங்களில்  எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழி...

படித்ததில் பிடித்தது மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:மகா அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று தனது நாட்டிற்குத் திரும்பியபோது, அவர் நோய்வாய்ப்பட்டார், அது அவரை மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது.அவர் தனது தளபதிகளைக் கூட்டி, "நான் விரைவில் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன், எனக்கு மூன்று விருப்பங்கள் உள்ளன, தயவுசெய்து அவற்றைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.இந்த கடைசி விருப்பங்களுக்கு கட்டுப்படுமாறு ராஜா தனது தளபதியிடம் கேட்டார்:1) "என் மருத்துவர்கள் மட்டுமே எனது சவப்பெட்டியை சுமக்க வேண்டும்" என்றார்.2) "எனது சவப்பெட்டியை கல்லறைக்கு கொண்டு செல்லும் போது, நான் சேகரித்த செல்வங்களை எனது உடல் கல்லறைக்கு செல்லும் பாதையில் வரிசையாகவையுங்கள்" என்று கூறினார்.3) "எனது மூன்றாவது மற்றும் கடைசி ஆசை என்னவென்றால், எனது இரண்டு கைகளும் என் சவப்பெட்டிக்கு வெளிய தொங்கவிடப்பட வேண்டும்" என்று அலெக்சாண்டர் கூறினார்.தளபதிகள் தங்கள் மன்னரின் கடைசி விருப்பத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டனர் மற்றும் அவ்வாறு செய்வதற்கான காரணத்தை அவரிடம் கேட்டனர்.அலெக்சாண்டர் கூறினார், "நான் கற்றுக்கொண்ட மூன்று பாடங்களை உலகம் அறிய விரும்புகிறேன்..."1."எனது சவப்பெட்டியை என் மருத்துவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் இந்த பூமியில் எந்த மருத்துவரும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும். அவர்கள் மரணத்தின் முன் தோற்றுப் போவார்கள்....2. தனது இரண்டாவது விருப்பத்தை விவரித்தார்: "நான் என் வாழ்நாள் முழுவதும் செல்வத்தை சம்பாதிப்பதற்காக செலவிட்டேன், ஆனால் என்னுடன் எதையும் கொண்டு செல்ல முடியாது... என்பதை மக்கள் அறியட்டும்”3. மூன்றாவதாக, "நான் இந்த உலகத்திற்கு வெறுங்கையுடன் வந்தேன் , நான் வெறுங்கையுடன் செல்கிறேன்...என்பதை மக்கள் அறிய விரும்புகிறேன் என்றார்.

Image

இன்றைய குறள்

Image
*✍🏽தினம் ஒரு திருக்குறள்🙏🏽* குறள்: 802 அதிகாரம்: பழைமை நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். கலைஞர்: பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். சாலமன் பாப்பையா: நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும். உலக பொதுமறையாம் திருக்குறளை போற்றி பின்பற்றுவோம்.

பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா நினைவுநாள்

Image
எஸ். வி. சுப்பையா பழம்பெரும் நடிகர்  எஸ். வி. சுப்பையா  (1920 - 29 சனவரி 1980) ஒரு இந்திய மேடை நடிகரும் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். இவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். அவை முக்கியத்துவமான கதாபாத்திரங்களான  கப்பலோட்டிய தமிழன்  திரைப்படத்தில்  பாரதியார்  வேடம்,  ஆதி பராசக்தி  திரைப்படத்தில்  அபிராமி பட்டர்  வேடம் தமிழக ரசிக மக்களிடையே இன்றளவும் பிரபலமான கதாபாத்திரத்தில் சுப்பையா நிலைத்துநிற்கிறார். ஆரம்பகால வாழ்க்கை தமிழ்நாட்டில் அன்றைய ஒருங்கிணைந்த  திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  செங்கோட்டையில்  வெள்ளையன் ஆசாரி–ராஜவடிவு இணையாருக்கு மகனாக பிறந்தார். சுப்பையா ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் நடிப்பில் ஆர்வம் மேலிட, ‘செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனி’ யில் 11-வது வயதில் சேர்க்கப்பட்டார். பின்னர் சண்முகானந்தா சபை மற்றும் சக்தி நாடகசபா போன்ற நாடக குழுக்களில் இணைந்து நடித்தார். ...

வரலாற்றில் இன்று.

Image
சனவரி 29 நாள் சனவரி 29 (Jan) நிகழ்வுகள்: 661 – அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 904 – பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செருசியசு புனிதப்படுத்தப்பட்டார். 946 – புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார். 1258 – மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர். 1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது. 1819 – இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார். 1834 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்றூ சாக்குசன் தொழிற்சங்க சர்ச்சையைத் தீர்ப்பதற்காக முதன் முதலாகப் பயன்படுத்த உத்தரவிட்டார். 1861 – கேன்சசு ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது. 1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் சோசோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம...

The features of Unified pension scheme introduced by Union government of India

Image
The Government of India has introduced the Unified Pension Scheme (UPS) to provide assured retirement benefits to central government employees. Key features of the scheme include: Assured Pension: Employees with a minimum of 25 years of service will receive a pension amounting to 50% of their average basic pay drawn over the last 12 months prior to retirement. For those with service between 10 and 25 years, the pension will be proportionate to their length of service.  Assured Minimum Pension: The scheme guarantees a minimum monthly pension of ₹10,000 for employees who have completed at least 10 years of service upon superannuation.  Family Pension: In the event of a pensioner's death, the spouse will receive 60% of the pension that the retiree was receiving.  Government Contribution: The government will contribute 18.5% of the employee's basic salary plus dearness allowance to the pension fund, while employees will contribute 10% of their basic salary plus dearness allow...

வரலாற்றில் இன்று.அமெரிக்க எழுத்தாளர் ஜான் பெர்கின்ஸ் பிறந்தநாள் இன்று.

Image
ஜான் பெர்க்கின்ஸ் (எழுத்தாளர்) ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் கன்ஃபெஷன்ஸ் ஆஃப் என் எகனாமிக் ஹிட் மேன் என்ற நூலை எழுதினார். இது பொருளாதாரத்தைப் பற்றியது. இந்த நூல் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.  ஜான் பெர்க்கின்ஸ் John Perkins, பிறப்பு ... திரைப்படங்கள் இவர் கீழ்க்காணும் ஆவணத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னைத் தானே கதாப்பாத்திரமாக ஏற்று நடித்தார். தி அமெரிக்கன் ரூலிங் கிளாஸ் (2005) ஸ்பீக்கிங் ஃபிரீலி வால்யூம் 1: ஜான் பெர்க்கின்ஸ் (2007) கன்ஃபெசன்ஸ் ஆஃப் என் எகனாமிக் ஹிட்மேன் (2007) ஆன் தி லைன் (2007) தி எண்டு ஆஃப் பாவர்ட்டி (2008) சீட்கெயிஸ்ட்: ஆடெண்டம் (2008) லெட்ஸ் மேக் மணி (2008) ஃபால் ஆஃப் தி ரிபப்ளிக்: தி பிரசிடென்சி ஆஃப் பராக் எச். ஒபாமா (2009) தி வெயிட் ஆஃப் செயின்ஸ் (2010) ஃபோர் ஹார்ஸ்மேன் (2012) அமெரிக்கன் எம்பயர் (2012) மணி & லைஃப் (2012) புராஜக்ட் சென்சார்டு தி மூவி (2013) கோல்டு ஃபீவர் (2013)

LFAD Retired officials Reunion 2025 Annual get_tohether

Image
உள்ளாட்சி நிதித் தணிக்கைத்  துறையின் ஓய்வுபெற்ற சென்னை வாழ் நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்வு.                              நேற்று சென்னை வாழ் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் ஓய்வுபெற்ற அலுவலர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு சென்னை அண்ணாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.100க்கு மேற்பட்ட  நண்பர்கள் கலந்துகொண்டனர்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்  தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து  என்னுடன் பணிபுரிந்த 15க்கு மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டது தான்.அண்ணன் கலியராசு, தஞ்சாவூர் கவிராயர்,சன்முகம், புகழேந்தி,ஸ்ரீவில்லிபுத்தூர் இளங்கோவன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோரும் இதில் அடங்குவர்.நிகழ்வின் முடிவில் அருமையான அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.நான் சென்னைக்குக் குடிபெயர்ந்த பின்னர்  2017 முதலே இந்நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்தது மனநிறைவாக உள்ளது.

எனது சிந்தனைகள்