Posts

Showing posts from June, 2025

விடுதலைப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய்

Image
#விடுதலைப்போராட்ட_வீராங்கனைகள்1_ஜல்காரிபாய்_தியாகத்தின்_உருவம்  ஜல்காரி பாய்  1857ல் முதல் சுதந்திர போராட்டம் என அழைக்கப்படும் ஓரளவு ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவாக நடந்த சிப்பாய்களின் எழுச்சியில் ஜான்சிரானி லட்சுமிபாயின் போர் களத்திலிருந்து இன்னும் வீரர்களை திரட்ட தலைமறைவானார். அவரை போலவே வேடமிட்ட ஒரு பெண் போர் களத்திலிருந்து அவரை தப்பிக்க வைத்தார். அந்த 27 வயதுடைய வீரப் பெண்ணின் பெயர் ஜல்காரிபாய். தனது ராணிக்காக தனது உயிரைக் கூட தூக்கியெறிய துணிந்த விசுவாசத்தின் மானுட ரூபம் அவர்.   1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். கடுமையான உழைப்பை செலுத்தும் விவசாயிகளான சடோபா சிங் - ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் தாயின் அரவணைப்பும், அன்பும் அவருக்கு நீண்ட நாள் கிடைக்கவில்லை. அவரது சிறு வயதிலேயே  தாயான ஜமுனா தேவி இறந்தார். அதன் பின்னர், சோகத்தை சுமந்த சடோபா சிங் இவரை தாயுமானவனாய் வளர்த்தார். சர்வ சுதந்திரத்துடன் அன்பு மகளை வளர்த்தார்.    அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான ...

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி யின் நாவல்'நள்ளிரவின் குழந்தைகள் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

Image
.இன்று பிறந்தநாள் காணும் பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி அவர்களின் பிரசித்தி பெற்ற நாவலான "Midnight's Children பற்றிய சுருக்கமான சித்திரம். --- நள்ளிரவில் பிறந்த சிறுவர்கள் – சல்மான் ருஷ்டியின் அதிசய நாவல் புதிய எழுத்து நடை, வரலாற்று பின்புலம், மீதொன்றும் மகத்தான கலையின் கலவையாக உருவாகியதுதான் சல்மான் ருஷ்டி எழுதிய "நள்ளிரவின் சிறுவர்கள்" நாவல். இந்த நாவல் 1981-ஆம் ஆண்டு வெளியானது. அது மட்டும் அல்லாமல் புக்கர் பரிசையும், புக்கர் பரிசின் 25, 40 ஆண்டுகளுக்கான "Booker of Bookers" விருதுகளையும் வென்றது. இது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றையும், இந்தியாவின் பிரித் தொடக்கக் காலங்களையும் புனைவு வழியே விவரிக்கின்ற சிறந்த முயற்சி. --- சுருக்கமான உள்ளடக்கம்: "நள்ளிரவின் சிறுவர்கள்" நாவல், 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியா விடுதலை பெற்ற நள்ளிரவில் பிறந்த சாலீம் சினாய் எனும் சிறுவனின் கதையை மையமாகக் கொண்டது. அதே நேரத்தில் பிறந்த இன்னும் 1001 குழந்தைகள் அதிசய சக்திகளுடன் பிறக்கின்றனர். இவர்களில் சாலீமைப் போல சிலருக்கு மனதை வாசிக்கும் திறன், சிலருக்கு நேரம் மற்றும...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Image
இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அகவை 54இனை முடித்து 55இல் அடியெடுத்து வைக்கிறார்.பாசிக , இந்துத்துவ சக்திகளை எதிர்த்துக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தைக் கடந்தாக வேண்டிய சூழலில் நாடு இருக்கிறது.இத்தகு வேளையில் 'இந்தியா கூட்டணியைப் பலப்படுத்தி ஜனநாயகம் காக்கும் மகத்தான கடமை திரு.ராகுலுக்கு உண்டு.இக்கடமையை ராகுல் செவ்வனே செய்து முடிப்பார் என்று நம்புவோமாக.திரு.ராகுலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.கீழே அவர் பற்றி Business Standard எழுதியுள்ள கட்டுரையைத் தருகிறேன். Rahul Gandhi is a prominent leader of the Indian National Congress (INC) representing the constituency of Rae Bareli, Uttar Pradesh since 2024 in the Lok Sabha.   He previously represented the constituency of Wayanad, Kerala, from 2019 to 2024, and Amethi, Uttar Pradesh, from 2004 to 2019.   Born on June 19, 1970 to former Prime Minister Rajiv Gandhi and Sonia Gandhi, Rahul Gandhi is the grandson of Indira Gandhi, also a former Prime Minister, and the gr...

ருஷ்யக் கவிஞர் மார்க்சியம் கார்க்கியின் தாய் நாவல் குறித்து தோழர் லெனின் :

Image
#இன்று_மார்க்சிம்_கார்க்கி_நினைவநாள் தாய் நாவல் குறித்து தோழர் வி.இ.லெனின் கூறியதை மார்க்சியம் கார்க்கி வார்த்தைகளிலேயே காண்போம். தாய் நாவல் குறித்து வி. இ. லெனின் – மாக்சிம் கார்க்கி …"லெனின் வேறு விதமாக இருப்பார் என்று நினைத்தேன். அவரிடம் ஏதோ ஒன்று இல்லாதது போல் தோன்றிற்று. அவர் கரகரத்த குரலில் பேசினார்; தமது அக்குளில் எங்கேயோ கைகளை நுழைத்துக் கொண்டு இறுமாப்பான பார்வையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார், மொத்தத்தில் அவர் ஒரு வெகு சாதாரணமானவராகக் காட்சி அளித்தார். அவரிடம் “தலைவரின் அடையாளம் எதுவுமே இல்லை. நான் ஓர் எழுத்தாளர். சிறு விஷயங்களைக் கவனிக்கும்படி என்னுடைய தொழில் என்னை வற்புறுத்துகிறது. இக்கடமை ஒரு பழக்கமாகிவிட்டது. சில சமயங்களில் இது சலிப்பூட்டும். நான் ஜி. வி. பிளெக்கனோவிடம் ”அழைத்துச் செல்லப்பட்ட” போது, அவர் தமது கைகளைக் குறுக்கு வாட்டத்தில் வைத்துக் கொண்டு ஒரு கடுமையான, ஆனால் சலிப்படைந்த பார்வையை என்மீது வீசினர், தமது கடமையைச் செய்து சோர்வுற்ற ஓர் ஆசிரியர் மற்றொரு புதிய மாணவனைக் காண்பது போன்று அவர் பார்த்தார். அவர் மிக மிகச் சர்வசாதாரனமான ஒன்றை என்னிடம் கூறினார்: ”நான் ...