Posts

வரலாற்றில் இன்று

Image
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1963-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28-ஆம் தேதியன்று காலமானார். காந்தியடிகளின் தீவிரப் பற்றாளரான இவர், நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்தபோதும் ஒரு துறவியைப் போலவே மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட முழு சம்பளத்தையும் அவர் வாங்க மறுத்தார்; ஆரம்பத்தில் அதில் 50 சதவீதத்தையும், பின்னர் வெறும் 25 சதவீதத்தையும் மட்டுமே தனது தேவைக்காகப் பெற்றுக்கொண்டு, மீதியை அரசு நிதிக்கே திருப்பி அளித்தார். மிகச் சிறந்த வழக்கறிஞராகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நிர்ணய சபையின் தலைவராகவும் திறம்படச் செயல்பட்டவர். பதவி ஓய்வுக்குப் பிறகு பாட்னாவில் உள்ள ஒரு சிறிய ஆசிரமத்தில் (சதாக்கத் ஆசிரமம்) தங்கித் தனது இறுதிக்காலத்தைக் கழித்தார். பாரத ரத்னா விருது பெற்ற இவருடைய எளிமையும், நேர்மையும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பாடமாகும்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் பகதூர் ஷா

Image
 #முதல் _இந்திய சுதந்திரப் போரின் தலைவர் #பகதூர்ஷா_ பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்குபிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல. 1847 – இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான்கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து – முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தைவடித்துள்ளான். ...

11_8_25விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் நினைவுநாள்.

Image
#இன்று_விடுதலைப்_போராட்ட_வீரர்_குதிராம்_போஸ்_நினைவுநாள் குதிராம் போஸ் (Khudiram Bose , Bengali: ক্ষুদিরাম বসু )(டிசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.  குதிராம் போஸ், பிறப்பு ... இளமை: 1889 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் போசு, தாயார் லட்சுமிப்ரியதேவி. சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் அகவையில் 1902 இல் அப்போதைய வங்க விடுதலைப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார். ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904 ல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம்

 #இன்று_நடிகர்திலகம்_சிவவாஜி_கணேசன்_நினைவுநாள் #அவர்_புகழ்_பாடுவோம்.சிவாஜி கணேசன் (Sivaji Ganesan, 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.  சிவாஜி கணேசன், பிறப்பு ... நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சி...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

Image
19_7_25 அன்று திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.பொதுக்குழுவில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சென்னை(தெற்கு) மாவட்ட மையத்திலிருந்து 20 கற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மாநிலத் தலைவராக தோழர் ப.அருள்ஜோஸ் (திருச்சி) , பொதுச்செயலாளராக தோழர் வீ.முத்துலிங்கம், சென்னை (தெற்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட வாக்குரிமை யின் இருண்ட அறிகுறிகள் _தோழர் திபங்கர் பட்டாச்சார்யா.

 வாக்குரிமையின் இருண்ட அறிகுறிகள் தோழர்.திபங்கர் ஜூன் 24, 2025 அன்று திடீரென தொடங்கப்பட்டு பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) இரண்டாவது வாரத்தில் இருக்கிறோம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடப்பதை அனைவரும் அறிவோம். இது பாதிதான் உண்மை. இப்போதைய இந்த சிறப்பு திருத்தம் முந்தைய அனைத்து திருத்தங்களிலிருந்தும் அடிப்படையில் வேறுபட்டது. நடந்து கொண்டிருக்கும் தீவிர சிறப்பு திருத்தம், விருப்பமுள்ள, விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை முழுமையாக மாற்றியமைக்கவழிவகை செய்கிறது. திரும்ப வந்துள்ள துயரம் சிறப்பு திருத்தத்தின் திடீர் அறிவிப்பும் அதன் அப்பட்டமான வெளிப்படையற்றத்தன்மையும் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துயர நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ‘நோட்பந்தி’ என இந்தியில் பிரபலமாக அழைக்கப்பட்டது போல, பீகார் மக்கள் சிறப்பு தீவிர திருத்தத்தை ‘வோட்பந்தி’ என்று அழைப்பது ஒன்றும் அதிசயமில்லை. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல்...

TBRGETA திருவல்லிக்கேணி வட்டக் கிளையின் ஐம்பெரும் விழா.#தமிழ்நாடு_ஓய்வுபெற்ற_அனைத்து_அரசுஊழியர்_ஆசிசிரியர்_சங்கம்_திருவல்லிக்கேணி_கிளை. #ஐம்பெரும்_விழா. சென்னை (தெற்கு) மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டக்கிளையின் சார்பில் சங்கத்தின் அமைப்பு தின விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா 11.7.25 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு திருவல்லிக்கேணி கிளைத் தலைவர் தோழர் ஆசான் இராம.மோகன்தாஸ் தலைமை வகித்தார்.செயலாளர் தோழர் வீ.முத்துலிங்கம் செயலாளர் செயலர் அறிக்கையினையும் தோழர் ம.சு.சுந்தரமூர்த்தி பொருளாளர் நிதி நிலை அறிக்கையினையும் சமர்ப்பித்தனர். மேதகு நீதியரசர் திரு.E. கிருஷ்ணன் அவர்கள், மேனாள் மாநில துணைத் தலைவர் தோழர் ஆ.ந.ஸ்ரீநாத் அவர்கள், மாவட்ட தலைவர் தோழர் பா.சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தோழர் லோ‌.இரா.இராசேந்திரன் மாவட்ட செயலாளர் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர்.இராம.மோகன்தாஸ் அவர்கள் நிறைவுரையாற்றினார். புலவர் இராசகோபாலன் அவர்கள் நன்றியுரை கூறினார்.விழாவில் பெருமளவில் பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில் சிறப்பான அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

Image